டாக்டர் கே. ஆர். மேகநாத் அவர்களின் செய்தித்தாள் கட்டுரைகள்
வெள்ளை பூஞ்சை பாதிப்புக்குள்ளான ஒருவரின் கண்பார்வை மீட்கப்பட்டது
45 வயதுடைய ஆண் நோயாளி ஒருவருக்குத் தலையின் வலது பக்கத்திலும் கண்ணிலும் கடுமையான வலி, இரட்டைப் பார்வை மற்றும் அதனைத் தொடர்ந்து பார்வையின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன. இது 'வெள்ளை பூஞ்சை' (White Fungus) பாதிப்பு என கண்டறியப்பட்டது; Maa ENT மருத்துவமனைகளில் டாக்டர் கே. ஆர். மேகநாத் மற்றும் அவரது குழுவினர் அளித்த சிகிச்சைக்குப் பிறகு அப்போயாளிக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.

டாக்டர் கே. ஆர். மேகநாத்தின் குழுவினரால் ஒரே நாளில் 6 காக்லியர் இம்ப்ளான்ட்.
Maa ENT மருத்துவமனையில் உள்ள டாக்டர் கே. ஆர். மேகநாத் தலைமையிலான குழுவினர், 2022 ஜூலை 10 அன்று ஆறு காக்லியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
https://telanganatoday.com/hyderabad-6-cochlear-implants-in-a-day-at-maa-ent-hospital
தெலங்கானாவில் கருப்பு பூஞ்சை பாதிப்புகளை முதன்முதலில் பதிவு செய்த ENT மருத்துவர்களில் டாக்டர் கே. ஆர். மேகநாத் ஒருவராவார்.
கோவிட்-19 தொற்றின் முதல் அலையின்போதே சுமார் 40 நோயாளிகளைப் பார்த்திருந்ததால், கோவிட்-க்கு பிந்தைய மியூகோர்கோமைகோசிஸ் (mucormycosis) பாதிப்பு என்பது டாக்டர் கே. ஆர். மேகநாத் மற்றும் அவரது குழுவினருக்குப் புதிய விஷயமாக இருக்கவில்லை. இருப்பினும், இரண்டாவது அலையின்போது பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கோவிட் எவ்வாறு இத்தகைய பூஞ்சைத் தொற்றுகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை இந்தியாவும் உலகின் பிற நாடுகளும் உணர்ந்துகொண்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை இந்தக் கட்டுரைகள்.
இவ்விஷயத்தில் இந்தக் கட்டுரைகளில் உள்ள தகவல்களைத் தாண்டி இன்னும் பல தகவல்கள் உள்ளன. மியூகோர்கோமைகோசிஸ் குறித்த எங்கள் கட்டுரையில் இதுபற்றி நீங்கள் விரிவாகப் படிக்கலாம்.













