நீங்கள் சத்தமாக குறட்டை விடுபவர் என்றால், இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்.
இது பரவலாகக் காணப்படும் ஒரு பாதிப்பு என்றாலும், பெரும்பாலும் கண்டறியப்படாமலே இருந்துவிடுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, இருபது பேரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முறையான தூக்கம் கிடைக்காததால் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பாதிப்பு, தூக்கத்தின்போது ஏற்படும் பெரும்பாலான மாரடைப்புகளுக்கும் காரணமாக அமைகிறது.